தனிமை - சரண்யா நடராஜன்
தனிமை சில நேரங்களில்
யாருக்கும் கிடைத்திடாத
அற்புதமான வரமாய்..
பல நேரங்களில் எப்பொழுதும்
இருக்கும் கொடுமையான
சாபமாய்..
சில நேரங்களில் விருப்பமாகவும்,
பல நேரங்களில் வெறுப்பாகவும்
வாழ்க்கையில் சிக்கலான தருணங்களில்
பல நல்ல முடிவுகளை எடுக்க
உதவும் தோழியாகவும்
நாம் வெறுத்தாலும், நம்மை விரும்பியே
துரத்தும் எதிரியாகவும்..
எந்நேரமும் நம்மை விலகாமல்
தனிமையில் விடாமல் இருக்கிறது
இந்த தனிமை....!
{kunena_discuss:779}