நீயும் நானும் - சரண்யா நடராஜன்
கனவாக நீ காட்சியாய் நான்
சரியாக நீ பிழையாய் நான்
கருவாக நீ உருவாய் நான்
விழியாக நீ பார்வையாய் நான்
காற்றாக நீ சுவாசமாய் நான்
வார்த்தையாக நீ மொழியாய் நான்
இசையாக நீ பாடலாய் நான்
மழலையாக நீ சிரிப்பாய் நான்
செடியாக நீ பூக்களாய் நான்
மரமாக நீ மழையாய் நான்
கடலாக நீ அலையாய் நான்
மேகமாக நீ நிலவாய் நான்
தாயாக நீ சேயாய் நான்
காதலாக நீ கவிதையாய் நான்
என்னுள் பாதியாய் நீ
உன்னுள் மீதியாய் நான்
என் கரம் கோர்த்து நீ
உன் தோள் சாய்ந்து நான்
உலகை மறந்தோம்
காதலில் கரைந்தோம்
நீயும் நானும்..
{kunena_discuss:779}