கவிதை - அவள் தவிப்பின் பெயர் - சரண்யா நடராஜன்
நான் பார்க்காத நேரத்தில் என்னை பார்த்து
நான் எப்பொழுது பார்ப்பேன் என தவித்து
நான் பார்க்கும் அந்த ஒரு கணத்தில்
அவள் பார்வையை பூமிக்குள் புதைத்து
வெட்கம் என்னும் பெயரில் கன்னத்தை சிவக்க வைத்து,
நான் பார்த்து விட்டோனோ என்ற
பயத்தையும், பதட்டத்தையும் தன்னுள் ஒளித்து
மறுபடியும் நான் எப்பொழுது பார்ப்பேன்
என ஏங்கும் தவிப்பிற்கு பெயர் தான் காதல் என்றால்
ஆம் இது தான் என்னவளின் காதல்..!
என்னுள் உள்ளவளின் காதல்..!
{kunena_discuss:779}