காதல் கதை - பார்கவி
மாலைத் தேநீர் குடித்துக் கொண்டு
காதல் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்
நம் கதையை வாழ்ந்து காட்டுகின்றன
புறாக்கள் இரண்டு.
இதையெல்லாம் பார்க்க இயலாத சூரியன்,
என் வெட்கத்தை திருடி
வானெங்கும் வண்ணம் பூசிவிட்டு
ஓடி ஒளிந்து கொண்டது.
{kunena_discuss:779}