மறதி vs முட்டாள்தனம் - பார்கவி
மறதியும் முட்டாள்தனமும் போட்டி போட்டுக் கொண்டண ..
அவள் மீது யாருக்கு உரிமை ஜாஸ்தி என!
அவரவர் வெற்றிகளை பட்டியலிட்டனர்
அவள் பல நண்பர்களின் பிறந்தநாளை மறந்துவிட்டாள்..
அதற்கு அவள் நண்பர்கள் பேசியதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளலையே..
அவள் அப்பாவின் செல் நம்பரைக் கூட மறந்தாளே..
இதென்ன பெருமை?,
சோப்பு வாங்கப் போன இடத்தில் கால் கிலோ சோப்பு கேட்டாளே.
பரீட்சையில் பாதி பதில்களை மறந்தாளே!
அப்படியா?
இடப்பக்கம், வலப்பக்கம் அவளுக்கு
இன்னும் சரியாத் தெரியாதே.
இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டிருக்க,
இறுதியாக முட்டாள்தனம் கூறியது...
அவள் காதலில் விழுந்தாளே!
வாயடைத்துப் போனது மறதி..
{kunena_discuss:779}