மழை பொழியும் மாலைப் பொழுது - பார்கவி
மழை பொழியும் மாலைப் பொழுது
தனிமையில் தவிக்கிறேன் துணையாக வாராயோ?
குறுஞ்செய்தியின் அழைப்பை ஏற்று
என் முன் வந்தாயே, குறும்புக் காதலனே!!
உன் ஈர அணைப்பில் இடைவெளியின்றி நாம்;
வழிந்தோட வழி தேடுகிறது மழைத்துளி!
வெட்கத்தில் தவிப்பது நானா, மழைத்துளியா?
போதும் விடு!
நான் உன்னை அடைந்தது போல
அந்தத் துளியும் மண்ணைச் சேரட்டும்!
{kunena_discuss:779}