7 அதிசயங்கள் - பார்கவி
கண் சிமிட்டிக் கொண்டு
நீ செய்யும்
வசீகரப் புன்னகை
அது புன்னகை தானா என்று
என்னை யோசிக்க வைக்கும்
மெல்லிய புன்னகை
நான் உன்னை தனியே விட்டுச் செல்கையில்
அழுகையை மறைக்கும் புன்னகை
நான் செய்யும் முட்டாள்தனங்களை
கேளி செய்யும் புன்னகை
அழுது ஓய்ந்ததற்கு
அடையாளமாய் வரும் புன்னகை
நான் பொய் கூறுகையில்,
கண்டுகொண்டேன் என்று சொல்ல
வெளிவர இயலாது தவிக்கும் புன்னகை
வாய்விட்டு சிரித்து ஓய்ந்த பின்னும்
உதட்டோரம் ஒட்டியிருக்கும்
மில்லிமீட்டர் புன்னகை
உன் புன்னகையிலேயே...
ஏழு அதிசயங்களைக் கண்டேன்!
{kunena_discuss:779}