பிரியம் - கிருத்திகா
" பிரியம் " எனப்படுவது
யாதெனில்
தொலைபேசியில்
பேசிமுடித்த பின்
அட இவ்வளவு நேரமா
பேசினோம் என்று சிலாகிக்கும்போது
எதிர்பாராமல் வரும்
இன்னொரு திடீர்
அழைப்பாகும்.
மறுமுனையில்
" இன்னும் பேசுவோமா ! வைக்க மனமில்லாமல் இருக்கு " என
பதில் வரும்போது
வரும் சுகமானது
நழுவி விழுந்த கனியை
இதழில் வைத்து சுவைப்பதற்கு ஒப்பானதாகும்.
{kunena_discuss:779}