பயணம் - கிருத்திகா
ஜன நெரிசல் உள்ள பேரூந்தில்
ஒரு இருக்கை
வெற்றிடமாக இருந்தால்
அடித்துப் பிடித்துப் போய் இருந்துவிடுகிறோம் .
அதுவே பல இருக்கைகள் வெற்றிடமாக
இருக்கும் பட்சத்தில்
கூட்டம் இல்லாத
பேரூந்தில் எந்த இருக்கையில் அமரலாம் என்ற
எண்ணத்தில் மனம் தடுமாறிக்கொண்டே இருக்கும் .
ஜன்னல் ஓரமாகவா
அல்லது ,
முன் இருக்கையா
அல்லது ,
பின் இருக்கையா என்று
குழம்புகிறோம்
அதீத ஆர்வக் கோளாறில் .
கடைசியில் ஏதோ ஒரு இருக்கையில்
அமரலாம் என்று பயணத்தைக் தொடர்கிறோம் .
இது போலத் தான் வாழ்க்கை என்ற பயணமும் கூட .
{kunena_discuss:779}