மழலையால் - கிருத்திகா
மரித்த மனம்
மீண்டும் உயிர்ப்பது
மழலையால் - உண்மைதானோ
எத்தனை ஏச்சுக்களும் பேச்சுக்களும்
சுமந்து கண்ணீரில் கரைந்த நாட்கள்
நீ இல்லை என்று வந்த பேச்சுக்களை
பொய்யாக்கி பாலைவன சோலையாய்
என்னுள் நிறைந்தாய் ....
தாயெனும் பூரிப்போடு தலை
நிமிரச்செய்தாய் ....
கண்ணே கண்ணீரோடு நன்றி
உரைக்கிறேன் உனக்கு
{kunena_discuss:779}