கவிதை - மதுவின் மயக்கம் - கவிதாசன்
ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து
ஈரக்காற்றில் தேகம் சிலிர்த்து
கரையை அரித்து தண்ணீர் ஓட
விழி இமைக்கா கண்கள் காண
கவிதைகளும் கலைகளும் படைத்ததுண்டு.
நீர் ஓடும் இடமெல்லாம்
மது அருந்த இடமுண்டு
தரையில் தண்ணீரில்- கண்ணாடி
குவளை வீசி மகிழ்வதுண்டு.
மதுவில் மயங்கி தன்னைக் கொன்றான்
மதுக்கழிவால் நீரையும் கொன்றான்.
{kunena_discuss:779}