கவிதை - பாவையே நீ படிப்பாவாய் - கவிதாசன்
திறன் கொண்ட மாந்தரெல்லாம்
திறன் உணரா வாழ்ந்திருந்தால்
திறனற்றோர் உச்சம் வர
திகைப்போடு பார்த்திரும்போம்.
திறன் கொண்ட நீயெல்லாம்
காலத்தை கையில் கொண்டால்
மேன்மேலும் உச்சம் செல்வாய்
மங்கையர் குலத்திற்கே விளக்காவாய்.
எத்திசையும் பரவி நிற்கும்
புகழ் ஒன்றை படைத்திடுவாய்
பாரினில் இனி வருவோர்க்கு
பாவையே நீ படிப்பாவாய்.
{kunena_discuss:779}