(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மனிதம் எங்கே??? - கவிதாசன்

Puppy

ஜோ வென புயலும் மழையும் 

ஒதுங்க குடைத் தேடி நனைகிறேன் 

என்பாட்டை பொறுக்காமல் துடித்தாள்

அங்கும் இங்கும் அலைகிறாள் என் தாய். 

 

மாடி மாடி வீடுகள் இருந்தும் நான் 

ஒதுங்க ஒரு மாடிப்படியும் இல்லை 

மனதை பூட்டமுடியா மனிதயினம் 

வாயிற் கதவை இரும்புகளால் பூட்டியது. 

 

சிறிய உடல், சந்துக்குள் ஊடுறுவினேன் 

கதகதப்பான படியோரம் குடை கிட்டியது 

பெரிய உடல்காரி வெளியே நின்றுவிட்டாள். 

தஞ்சம் கொள்ள இடம்தேடி அழைகிறாள். 

 

உண்பதற்கு பல்லும் இல்லை, ஒருவார 

குழந்தை நான். பொறுத்து பொறுத்து பார்த்தேன் 

பொறுக்கமுடிய வில்லை வயிற்றுப் பசி 

ஓலமிட்டு அழுகிறேன் சிறைகளின் உள்நின்று.

 

மழைக்கு மாடிப்படியில் குடிவந்த நாய்க்குட்டி பாலூட்ட தாயின்றி இரவெல்லாம் ஒலமிடுகிறது

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.