உன்னை நினைத்து - தமிழ் தென்றல்
தனிமை வலித்தது உன்னை நினைத்த நாள் முதல்
உன் நினைவுகள் என் பெண்மையை எரிக்கிறது
உன்னை காணும் ஏக்கம் என் கண்களில் இன்று
உன் முதல் வார்த்தையை கேட்க என் செவிகள் தவிக்கின்றன
உன் ஸ்பரிசத்திற்க்காகக் காத்திருக்கிறேன்
உன்னால், என் வாழ்க்கையே தலைகீழாக மாற
எதைப் பார்த்தாலும் உன் ஞாபகம்
எதை செய்தாலும் உன் நினைவுகளென
எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
நீ, என்னைச் சேரும் நாளை எண்ணி தவம் புரிகின்றேன்
எப்போது என்னைச் சேர்வாய் என்னவனே?!
{kunena_discuss:779}