கண்ணனின் வருகை - தமிழ் தென்றல்
கண்ணன் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி
செவ்வாய்க் கிழமையை எண்ணிக் காத்திருந்தாள்
பொழுதுகள் கழிந்தது அந்த நாளும் வந்தது
மனதில் அவன் நினைவுகள் சுமந்து, மங்கை
சென்றாள் அவனைக் காண!!
அவனைக் காணப் போகும் இன்பத்தோடுக்
காத்திருந்தாள் கன்னி
நேரமும் கடந்தது……. அவனைக் காணாது
கவலை, குழப்பம், வருத்தம், காதலென
எல்லாம் கலந்த உணர்வை அவள்
முகம் பிரதிபலிக்க, ஒரு மாற்றம்
கண்கள் மின்னியது, இதழ்களில் புன்னகை
உணர்த்தியது அவளின் கண்ணன் வந்ததை!!!
{kunena_discuss:779}