(Reading time: 1 - 2 minutes)

41. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

ஆயிரம் கனவுகளின் விதை நான்..

தீராத ஆசைகளின் குரல் நான்..

வெல்ல முடியாத மோகத்தின் வித்து நான்..

சொல்ல முடியாத தாபத்தின் சோகம் நான்..

சலிக்காத பார்வையின் சுகம் நான்..

மயங்காத மனதின் மதியும் நான்..

காணாதக் காட்சியின் கருத்தும் நான்..

கலையாதுத் தொடரும் கனவும் நான்..

எட்டாது ஏங்க வைக்கும் ஏக்கம் நான்..

விளங்காத விதியின் விந்தை நான்..

கேளாத இக்கதையின் ஆக்கம் நான்..

புரியாத புதிராய் இப்புவியில் நான்..

உயிர்களில் அழியாது உறையும் காதலே நான்..

 

 

Poem # 40

Poem # 42

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.