கல்லூரிக் காலங்கள் - அமுத ஸ்ரீ
பள்ளிப் பருவம் முடிந்து
துள்ளித் திரிந்த நாங்கள்
ஜூன் மாத பூக்களாய்
கல்லூரி என்ற நந்தவனத்தில்
நுழைந்தோம்!!!
எங்களின் நான்கு ஆண்டுகள்
ஆயிரம் கனவுகளுடன்
மூடாத கதவுகளாய் திறந்திருந்தன!!!
எங்களின் கால்சுவடுகளை
ஏற்க மறுக்காத படிகளும்!!!
வாசனைப் பூக்களை வருகையாய்
கொண்ட பசும்பலகையும்!!!
நண்பனின் முகம் பார்க்க
காத்திருக்கும் தூண்களும்!!!
HOD-யின் அதிர்வு கேட்டே
அசையாத மரங்களும்!!!
ஆசானும் அன்னையாய்
தெரிந்த வகுப்பறையும்!!!
கல்லூரியின் நுலகத்தையே
எட்டிப் பார்க்காத நாட்களும்!!!
எட்டிப் பார்த்து எழுதியும்
தேர்வில் தேறாத மதிப்பெண்களும்!!!
தேர்வு முடிவிலும்
மனம் தளராத நெஞ்சமும்!!!
நண்பனின் சட்டையை
மாற்றித் திரிந்த நாட்களும்!!!
அழகி என்று பொய் சொன்னாலும்
அழகாய் ரசிக்க தோன்றிய நாட்களும்!!!
உணவினை ஊட்டி
அன்பினை பரிமாறிய
எங்கள் கல்லூரி கேண்டினும்!!!
படிப்பில் நடிப்பின்றி
நடிப்பையே படிப்பாக்கிய
எங்களின் நாடக மேடையும்!!!
கல்லூரி சுற்றுலாவில்
சுழன்று வந்த மேகத்தை
சுட்டு விரலால் தொட்டு வந்த நாட்களும்!!!
சண்டைகள் மட்டுமன்றி
எங்களின் சந்தோஷங்களும்
கதை கதையாய் சொல்லும் மரங்களும்!!!
வெள்ளை காகிதமாய் இருந்த எங்களை
வண்ண கோலமாய்;
வானவில்லின் ஒரு அங்கமாய்
வரைந்தது எங்கள் கல்லூரியின்
வாசல்தான்....
கனவுகள் கலைந்தாலும்
எங்களின் கண்களில்
கல்லூரி காலங்கள் கலைவதில்லை................
இதையே இறைவன் கல்லூரிக்கு
கொடுத்த வரமோ.........
{kunena_discuss:779}