நான் – இளையரசி
மாற்ற முடியா உலகில்
மாட்டி கொண்டபடி நான்..
இயல்பாய் நடித்து கொண்டிருக்கிறேன் ..
இதயத்துள் பாரம் இருந்தாலும் ..
இமைகளுள் ஈரம் சுரந்தாலும் ..
குரல் வலையில் குமுறல் வந்தாலும் ..
இயல்பாய் நடித்து கொண்டிருக்கிறேன் ..
சிந்தனை சிதிலமடைந்து விடுகிறது சிலநேரம்
கட்டுப்பாடுகள் கற்று கொள்கிறேன் ...
கவிதையினில் மட்டும்
என்
கண்ணீரை விட்டு செல்கிறேன் ...
{kunena_discuss:779}