கவிதை - காதலில் தெரிந்தே தோற்று போகின்றேன் – ஸ்ரீவள்ளி
காதல்
கனவிலும் கவிதையிலும்
மட்டுமே அழகென
நினைத்திருந்தேனே.....
உன்னை தீண்டிய தென்றல் என்னை
தீண்டும் வரை
பார்த்த முதல் பார்வையில்
விழுந்நிருந்தால்
ஹார்மோன்கள் என
பறக்க விட்டிருப்பேன்
பழக பழகவே மெதுவாக
சிறகடித்தன பட்டாம்பூச்சிகள்
பௌர்னமி பல கடந்தும்
தேயவில்லை
என்னுள் ஒளி வீச தொடங்கிய
காதல் நிலவு
இதயத்தின் கனவுகளும்,
உன் நினைவுகளும்
என்னை மயக்கின
இதயம் அசந்த நொடியில்
ஆட்கொண்டது மூளை...
உனக்கேற்றவள் நான் இல்லையென தாழ்த்தியது
அறிவு.....
விலகி விடுவாயோ
என்ற பயத்தில்
விலகியே நின்றிருந்தேன்......
இதயமும் மூளையும் இட்ட போரில் மாய்ந்து போனது
நம்(என்) காதல்
கரைந்து போனது
காலமும் காதலும்
என் கண்ணீராய்...
காதலை சொல்ல
விருப்பும் வீரமும் இருந்தும்
சொல்லாமல்,
தெரிந்தே தோற்று போகின்றேன்.....
{kunena_discuss:779}