(Reading time: 1 - 2 minutes)

எங்கே??? எங்கே??? - இந்துமதி

enge

அதிகாலையிலும் அந்திமாலையிலும்

வான்மகளே வெட்கமுறும்

ஆணழகு ஆதவனே ...

நீ எங்கே???

பூஞ்சோலையிலே

பூத்துக்குலுங்கிடம்

மலரின் நறுமணமே.....

நீ எங்கே??

மகரந்தத்

தண்டிலிருந்து

தேன் உறிஞ்சும் வண்டுகளே....

நீர் எங்கே???

வான்மகளின்

மடியிலே

தவழ்ந்திருக்கும் மதியே...

நீ எங்கே???

திங்களைத் 

தீண்டி

விளையாடும் முகிலே...

நீ எங்கே???

வானிற்கும்

மண்ணிற்கும்

பாலமாகிய மழைத்துளியே....

நீ எங்கே???

காண்போரைக்

கவர்ந்திடும்

பேரழகு மலர்களே...

பூவைக்கு பதில் புணருங்களேன்....

சொல்லிய செய்தியில்

பூந்தோழியைத்

தூதாக்கினேன்....

உமக்கு வாழ்த்தைக் கூற...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.