ஏனடா கண்ணா - விமலா தேவி
அழுதேன்
சிரிப்பைத் தந்தாய்..
சோர்ந்தேன்
அணைப்பு தந்தாய்..
துவண்டேன்
நெற்றி முத்தம் தந்தாய்.
வெறுத்தேன்
நேசம் தந்தாய்..
பாலையாலய் இருந்தேன்
மழை தந்தாய்..
இன்றோ கானல் நீராய்
மறைந்து..
மீண்டும் கண்ணீர் தந்தது
ஏனோ...!!!
{kunena_discuss:779}