அனைத்தும் ஆனவனே - விமலா தேவி
தந்தையை உணர்ந்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
நான் தவறு செய்கையில்
திட்டுவாயே அத்தருணத்தில்!!
தாயை உணர்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
கோபப்பட்டாலும் சாப்பிட்டாயா?
என கரிசனம் காட்டுவாயே அத்தருணத்தில்!!
நண்பனை உணர்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
என்னை கேலி செய்து நீ கடுப்படிக்கையிலும்..
உன்னிடம் துக்கத்தையும் சந்தோஷத்தையும் எவ்வித தயக்கமின்றி நான்
பகிர்வேனே அத்தருணத்தில்!!
குருவை உணர்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
என் தவறுகளை சுட்டிக்காட்டி
புரியவைத்தபோதும்
என் திறமைகளை ஊக்க படுத்தி
அதை மெருகேற்ற உதவுவாயே அத்தருணத்தில்!!
என்னையே உணர்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
என் மனதின் எண்ணங்களை
வலிகளை ஆசைகளை
நான் உரைக்கும் முன்னமே
உணர்ந்து என்னிடம் கூறுவாயே
அத்தருணத்தில்!!
தாயாய் தந்தையாய் குருவாய்
நண்பனாய் என்னுள் இருக்கும்
என் மனமாய் ஆன என்
உடன் பிறவா சகோதரனே..
உடன் பிறவாவிடுனும்
என்றும் உன் உடன் நான் இருப்பேன் என்ற நம்பிக்கை தந்தாயடா..
ஒரு முறை கூட நேரில் பார்ததில்லை உன்னை..
ஆனாலும் கூட என்ன??
நேரில் கண்டிரா கடவுளின் மீது
நான் கொண்ட நம்பிக்கை
உன் மீதும் உண்டு..
நான் உன் அக்கா என்பதை விட
நீ என் தம்பி என்பதில் பெருமிதம் அடைகிறேன்
என் கண்ணில் கண்ணீர் வெளிவரும் முன்னமே துடைக்கின்ற..
நான் விழுகையில் கை கொடுக்கின்ற..
நான் துவளுகையில் தட்டிக்கொடுக்கின்ற..
உன் தங்க கரத்தில்
ரக்ஷா பந்தன் கயிறு கட்டி
நீ என்றும் பல்லாண்டு நலமாக வாழ்ந்து
பல பல வெற்றிக்னிகளை பெற்று
வாழ்வாய் என வாழ்த்துகின்றேன்..
இனிய ரக்ஷாபந்தன் வாழ்துக்கள்
என் அருமை சகோதரனே...!!!
{kunena_discuss:779}