மழை நீ(ர்) - விமலா தேவி
மேகமாய் வருகிறாய்..
மின்னல் என வந்து மறைகிறாய்....
சில்லென்ற சாரலாய் சிரிக்கிறாய்..
வருவாயோ மாட்டாயோ என்று
போக்கு காட்டுகிறாய் ...
இடி முழக்கமாய் கோபம் கொள்கிறாய்...
சோவென்று அன்பு மழையில் நனைக்கிறாய்...
மண் வாசனையாய் என் ஸ்வாசத்தில் நுழைகிறாய்..
சிறு சிறு நினைவுகளை
மழை நீராய் என் இதயத்தில் சேமிக்கின்றாய்....
நான் மிகவும் நேசிக்கும் வான் மழை போன்றவனே......
உன்னில் நான் நனைந்து ஒரு குழந்தை என குதுகலிக்க காத்திருக்கிறேன்.....
பெருமழையாய் என்னை தேடி வா...
நான் உன்னை நினைக்கும் நேரங்களில் ...
என்னை நனைத்திடவா..!!
{kunena_discuss:779}