(Reading time: 1 minute)

முதல் குழந்தை - மலர்மதி

baby

அன்பெனும் கருவை

நினைவெனும் உணவூட்டி

மனமெனும் கருவறையில்

கலையாமல் சுமந்து - நம்

காதல் சிசுவை

சுகமாய் பிரசவித்து

சந்தோஷப் பாலூட்டி

பக்குவமாய் வளர்த்தேன் - உன்

கலக்கத்தில் கண்ணீர் துடைத்து

துன்பத்தில் தோள் கொடுத்து

உயிர் பிரியும் நிலையிலும்

உன்னைப் பிரியாது காத்து நிற்கும்

என் முதல் குழந்தை

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.