முதல் குழந்தை - மலர்மதி
அன்பெனும் கருவை
நினைவெனும் உணவூட்டி
மனமெனும் கருவறையில்
கலையாமல் சுமந்து - நம்
காதல் சிசுவை
சுகமாய் பிரசவித்து
சந்தோஷப் பாலூட்டி
பக்குவமாய் வளர்த்தேன் - உன்
கலக்கத்தில் கண்ணீர் துடைத்து
துன்பத்தில் தோள் கொடுத்து
உயிர் பிரியும் நிலையிலும்
உன்னைப் பிரியாது காத்து நிற்கும்
என் முதல் குழந்தை
{kunena_discuss:779}