மலரின் தவம் - மலர்மதி
நாளொரு வண்ணத்தில்
புன்னகை அலங்காரத்தில்
ஆண்டு பல தவமிருக்கின்றாள் - தன்னவன்
அகந்தனில் அழகாய் அமர்ந்திட
தோளில் மாலையாய் ஆடிட
உள்ளங்கையில் செண்டாய் உறங்கிட
சுவாசந்தனில் வாசமாய் நிறைந்திட
நெஞ்சினில் நிம்மதியாய் நிறைந்திட
பாதத்தை மென்மையாய் வருடிட
துன்பத்திலும் இன்பமாய் துணைவந்திட
மரணத்திலும் மஞ்சமாய் மடிதாங்கிட.....
வரம் கிடைத்திடுமோ…?
தவம் முடிந்திடுமோ…?
{kunena_discuss:779}