(Reading time: 1 minute)

மலரின் தவம் - மலர்மதி

flower

நாளொரு வண்ணத்தில்

புன்னகை அலங்காரத்தில்

ஆண்டு பல தவமிருக்கின்றாள் - தன்னவன்

அகந்தனில் அழகாய் அமர்ந்திட

தோளில் மாலையாய் ஆடிட

உள்ளங்கையில் செண்டாய் உறங்கிட

சுவாசந்தனில் வாசமாய் நிறைந்திட

நெஞ்சினில் நிம்மதியாய் நிறைந்திட

பாதத்தை மென்மையாய் வருடிட

துன்பத்திலும் இன்பமாய் துணைவந்திட

மரணத்திலும் மஞ்சமாய் மடிதாங்கிட.....

வரம் கிடைத்திடுமோ…?

தவம் முடிந்திடுமோ…?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.