உன் இல்லாமையை உணர்கிறேன் - ஜெனட்
சாலையோர பூக்களை தனியே நான் மட்டும் ரசிக்க நேர்ந்தபோது
உன் இல்லாமையை உணர்கிறேன்…
அதிகாலை வெண்பனிச்சாரல் என் கன்னம் பட்டு தெரித்த போது
உன் இல்லாமையை உணர்கிறேன்…
அங்கே இரு காதலர்கள் சிகப்பு ரோஜாக்களை பரிமாறி சிவந்ததை பார்க்க நேர்ந்தபோது
உன் இல்லாமையை உணர்கிறேன்…
இரவு நேர விளக்கில் நான் தனியே நடந்த தருணத்தில்
உன் இல்லாமையை உணர்கிறேன்…
கண்மூடி சாய்ந்த நேரம் என் கண்ணத்தில் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்தபோது
உன் இல்லாமையை உணர்கிறேன்…
என் கண்ணில் சோகம் கண்டு தோழியர் என்னை தேற்ற முயன்றபோது
உன் இல்லாமையை உணர்கிறேன்…
என் கண்ணாடி பிம்பத்தில் உன்னை கண்டு திகைத்து என் நிலை உணர்ந்தபோது
உன் இல்லாமையை உணர்கிறேன்…
உன் பிரிவு இத்தனை துயர் என்று தெரிந்திருந்தால்
அன்றே ஒரு கனம் கூடுதலாக சிந்தித்திருப்பேன்…
இன்று உன் நினைவை துறத்த வழி தெரியாமல்
தினமும் பொழுதை கழிக்கிறேன் உன் நினைவில்…
{kunena_discuss:779}