நானாகிட வந்தாய் - ஜெனட்
இமைக்கும் நொடி பொழுதும் எனைபிரிய மறுத்து
இமையாக எனை தொடர்ந்தாய்
உன் குரல் எட்டும் தூரத்தில் நான் இருக்க வேண்டுமென நீ என்னி
என் காதோர முடி கற்றையாய் தவழ்ந்தாய்
என் மூச்சு காற்றும் நம்மை பிரிக்க கூடாது என்று
என் சுவாசமாய் கலந்தாய்
என்னுடன் நடை போட என்னி
என் கால் கொலுசாய் இசை மீட்டினாய் -இன்று
உன் நினைவுகளை மட்டும் என்னுடன் நிழலாய் தொடரவிட்டு
நிஜத்தில் காற்றோடு கலந்தது ஏனடா…!
{kunena_discuss:779}