கவிதை - காதலர் தின பரிசு - சிவரஞ்சனி
கணவன் : நீ ஏன் என்னிடம் காதலர் தின பரிசு கேட்கவில்லை?
மனைவி:
உன் பார்வை பனியில்
குளிக்கும் நானே ரோஜாவாய்
மலர்கிறேன்!
நீ வாங்கி வரும் எந்த ரோஜாவும்,
உன் பார்வையில் மலரும்
என் மனதினை விட அழகாய் இராது!
நான் காலம் தாழ்த்தி உணவருந்துகையில் வரும்
உன் வசைகளைவிட,இசைவானதொரு பரிசுப்பொருள் இருப்பதாய்த் தோன்றவில்லை !
என் காய்ச்சலுக்குக் கொதிக்கும்
உன் மனதினை விட,
தங்கமோ,வைரமோ
மிளிர்வதாய்த் தோன்றவில்லை!
நள்ளிரவு நேர இருமலுக்கு,
நீ தரும் ஒரு குவளை வெண்ணீரைவிட,
எந்த உயர்தர உணவாக
உணவும் ருசிப்பதாய்த் தோன்றவில்லை!
என்னை நானே இம்சிக்கும் வேளைகளில்,என் மீதான
அன்பு மேலோங்கி எழும்
உன் அதிகாரத்தைவிட,
அழகானதொரு ஆடை
இருப்பதாய்த் தோன்றவில்லை!
நம் காதலைக் காவியமாக்கும்
பரிசினை அனுதினமும் பெறும்
நான், வேறெதனைக் கேட்பேன்???
{kunena_discuss:779}