கவிதை - நாணம் - சிவரஞ்சனி
கண்மணியே!
உன் கைகள் மீது
கடும் கோபம் எனக்கு!
இந்த மண்ணின் மீது
மாளாத பொறாமை எனக்கு!
உன் வெட்கத்தின்
உரிமையாளன் நான்!
நான் கண்டு,
கொள்ளைபோக வேண்டிய
உன் வெட்கத்தை,
இடையில் புகுந்து
இவை கொள்ளை
அடித்துச் செல்கிறதே !!!
{kunena_discuss:779}