(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தீபாவளி - சிவரஞ்சனி

crackers

புத்தகங்கள் நிறைய வேண்டிய

பூக்கரங்களில், புஸ்வான வெடி நெடி!

புஸ்வானங்கள்  பூப்பூக்க,

எத்தனை பிஞ்சு மலர்களின் 

கல்விக் கனவுகள்

கருக்கப்படுகின்றன!

விண்ணில் அழகாய்ப் பாய்கிறது 

வானவேடிக்கைகள் !

மண்ணில் அநியாயமாய்ப்  புதைகிறது

அரும்புகளின் கல்வி !

மத்தாப்புக்கள் சிரிக்க,

சில மலர்கள் சிரிப்பைத்

தொலைக்கின்றன!

பட்டாசு  படபடக்கும்போது,

என் உள்ளமும்  படபடக்கிறது ,

வறுமை நரகாசுரனின் 

கொடூர களிப்பினைக் கண்டு!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.