கவிதை - தீபாவளி - சிவரஞ்சனி
புத்தகங்கள் நிறைய வேண்டிய
பூக்கரங்களில், புஸ்வான வெடி நெடி!
புஸ்வானங்கள் பூப்பூக்க,
எத்தனை பிஞ்சு மலர்களின்
கல்விக் கனவுகள்
கருக்கப்படுகின்றன!
விண்ணில் அழகாய்ப் பாய்கிறது
வானவேடிக்கைகள் !
மண்ணில் அநியாயமாய்ப் புதைகிறது
அரும்புகளின் கல்வி !
மத்தாப்புக்கள் சிரிக்க,
சில மலர்கள் சிரிப்பைத்
தொலைக்கின்றன!
பட்டாசு படபடக்கும்போது,
என் உள்ளமும் படபடக்கிறது ,
வறுமை நரகாசுரனின்
கொடூர களிப்பினைக் கண்டு!!!
{kunena_discuss:779}