அதிகாலை - சிவரஞ்சனி
தினமும் அதிகாலையில்,
அந்த அடிவானத்தை
வென்றுவிடுவேன் என்ற
ஆணவத்தோடு வாசலில்
கோலமிடுகிறேன்!
ஆனால் அவமானத்தோடுதான்
திரும்புகிறேன்!
அடவானில்,
அழகான ஆணவத்தோடு
அந்த ஆதவன்
என்னைக் கேலி செய்கிறான்!
என்னைவிட,இந்த அதிகாலை
விண்ணைவிட அழகிய கோலம்
உன்னால் போடமுடியாதென்று!!!
{kunena_discuss:779}