முயற்சி - சிவரஞ்சனி
கவிஞனாகி விட வேண்டும்
என்ற ஆசையோடே,
ஒவ்வொரு முறையும்,
என் எண்ணங்களை,
வார்த்தைகளாக வடிக்கிறேன்!
ஆனால்,
ஒவ்வொரு முறையும்,
தோல்வியையே தழுவுகிறேன்!!
என் எண்ணங்களின்
மொத்த ஜீவனையும்,
வார்த்தைகளில்
வடிக்க இயலாததால்!!!
{kunena_discuss:779}