சுயநலம் - சிவரஞ்சனி
அன்பே!
உன் விழிகள் சிந்தும்
வைரத் துளிகள்
எனக்கானவை எனும் பொழுது,
என்னுள் எழும்
சிலிர்ப்பினையும்,மலர்வினையும்,
மகிழ்வினையும்,
நெகிழ்வினையும்
எவ்வளவு முயன்றும்
தடுக்க இயலவில்லை என்னால்!
இச்சுயநலத்தினை எவ்வாறு
சுட்டெரிப்பேன்?
வழியறியேன் நான்.
உண்மை சொன்னேன்,
நேசிப்பாயா?
மனதார மன்னிப்பாயா?
{kunena_discuss:779}