கவிதை - யாசகம் - சிவரஞ்சனி
பாசத்தோடு தாய் ஊட்டும் சோற்றினை ,
இதழ் பிரித்து
உண்ணும் போது ,
சிந்திச் சிதறும் பருக்கைகளைக் கொண்டு விளையாட வேண்டிய பிஞ்சுக் கரங்கள் ,
யாசகம் பெற்ற
சில்லறைகளைச் சுமந்து,
ஒவ்வொருவரையும்
இமை கருகிய பார்வையுடன்
நோக்குவதை காணும் பொழுது,
இதயம் இடி சுமக்கிறது!!
இறைவா !!!
உன்னிடம் யாசகம் கேட்கிறேன் !
குறைந்தபட்சம் ,பிஞ்சுக் கரங்கள் யாசிக்காத சமூகத்தினை அருள்வாய்!!!
{kunena_discuss:779}