(Reading time: 1 - 2 minutes)

கவிதை - யாசகம் - சிவரஞ்சனி

Child

பாசத்தோடு தாய்  ஊட்டும்  சோற்றினை ,
இதழ்  பிரித்து  
உண்ணும்  போது ,
சிந்திச் சிதறும் பருக்கைகளைக் கொண்டு விளையாட  வேண்டிய  பிஞ்சுக் கரங்கள் ,

யாசகம்  பெற்ற 
சில்லறைகளைச்  சுமந்து,
ஒவ்வொருவரையும் 
இமை  கருகிய  பார்வையுடன்
நோக்குவதை காணும் பொழுது,
இதயம் இடி  சுமக்கிறது!!

இறைவா !!!
உன்னிடம் யாசகம் கேட்கிறேன் !
குறைந்தபட்சம் ,பிஞ்சுக்  கரங்கள் யாசிக்காத சமூகத்தினை  அருள்வாய்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.