(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அகதியின் கதறல் - வின்னி

womanJail

எனக்குப் பயமாக இருக்கிறது

அங்கு யாரும் இருக்கிறீர்களா?

நான்  இங்கே  நரகத்தில்

 

கத்துகிறேன், கதறுகிறேன்,

கண்ணீர் விடுகிறேன்  

பசியில் மயங்குகிறேன்

கதவைத் தட்டுகிறேன்

கதவை ஒருவரும் திறப்பதில்லை

 

அங்கெ யாரும் இருக்கிறீர்களா ?

தயவு செய்து நாம் அழுவதைக்  கேளுங்கள்

எமது வலியை உணருங்கள்  

இங்கே ஒவ்வொருவராக இறக்கிறார்கள்

என் தங்கையும் கற்பளிக்கப்பட்டு இறந்துவிட்டாள்

எங்கே என் கணவன்?

 எங்கே என் பிள்ளைகள்?

என் தோழியும் இங்கே இறந்துவிட்டாள்

 

நான் மீண்டும் மீண்டும் அழைக்கிறேன்

ஏன் எனக்கு ஒரு பதிலும்  இல்லை? 

எனக்குப் பயமாக இருக்கிறது

அங்கே யாரும் இருக்கிறீர்களா?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.