(Reading time: 2 - 3 minutes)

கவிதை - மீண்டும் ஒரு குழந்தை - வின்னி

againBaby

தாய் மடியில் தவழ்ந்த நீ

குழந்தையாக நடக்கிறாய்

காளையாக ஓடித் திரிகிறாய் 

காதலிக்கிறாய், மணம் முடிக்கிறாய்

பொருள் குவிக்கிறாய்

பிள்ளைகளை பெறுகிறாய்,

வளர்ந்ததும், அவர்களை பிரிகிறாய்

காதலித்த மனைவியை மீண்டும் காதலிக்கிறாய்

 

வாழ்க்கையை அனுபவிக்காமல்

மிகவும் மூத்தவராகி விடுகிறாய்

வாழ்வின் மேடு பள்ளங்களை ஏறி இறங்கி  

உன்னைத் தனிமைப்படுத்துகிறாய்

 

அறுபதின் முடிவில் நல்வாழ்க்கை தொடங்கும்

என்றெண்ணி உன்னையே ஏமாற்றிய நீ

காலத்தைக் கடத்தி, எழுபதை அடைகிறாய் 

 

ஒவ்வொரு நாளும் நடந்து நடந்து

கால் எலும்புகள் உறைந்து

பலமின்றிச் சிணுங்குகிறாய்

வலி மறைந்து இயல்புநிலை வெளிப்படுகிறது

 

ஆர்ப்பாட்டத்தில் எதுவும் இல்லை

கூட்டியோ, கழித்தோ,பெருக்கியோ,பிரித்தோ

கடைசியில் வருவது பூஜ்யம்

திரும்பிப் பார்க்கிறாய் பழையதை

 

அனுபவித்த கதைகள் விட்டுவிடாது

அனுதாபங்களை தனிமைப்படுத்தி

மனசாட்சி  முன் வருகிறாய்

 

பிறப்பின் அதிசயத்தை மீண்டும் உணருகிறாய்       

ஒரு குழந்தை விளையாட்டில் மீண்டும் திகில்,

சிரிக்கவும் போட்டியிடவும் கற்றுக்கொள்கிறாய்

மகிழ்ச்சிமிக்க பெருந்தன்மையுடன்

மீண்டும் ஒரு குழந்தையாக

காலத்துடன் கலந்திருக்க உன்னால் முடிகிறது

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.