கடவுளை நம்பு, உன்னை வழிநடத்த! - வின்னி
உன் உணர்வுகளை நான் அறிவேன்!
மலையில் ஏறி,
கீழே உருண்டு,
தரையில் விழுந்து,
மறுபடியும் ஏற முயற்சிக்க,
உனக்கு மனமில்லை!
ஆனால், அதை நீ,
கட்டாயம் தொடர வேண்டும்.
நான் உனக்காக இருப்பேன்.
உனக்கு உதவ அங்கே இருப்பேன்.
நீ எப்படி உணர்கிறாய் என்று நான் அறிவேன்!
நீ எப்படியும் பறக்க வேண்டும்.
உன் சிறகுகளை விரித்து உன்னால்
பறக்க இயலாவிட்டால்,
எப்படி இருக்குமென்பது எனக்குப் புரியும்.
மறு முறை முயற்சிக்க,
மனமில்லாத நிலை!
ஆனால், நீ கட்டாயம் முயற்சிக்க வேண்டும்!
நீ எப்படியும் பறக்க வேணும்.
நான் உனக்காக அங்கிருப்பேன்.
நான் அங்கிருப்பேன்,
உன்னோடு பறப்பதற்கு.
எனக்கு நன்றாகப் புரிகிறது, உனது நிலை!
ஒரு காலை மற்றோரு கால் முன் வைப்பதற்கு,
நீ விழுவதற்கு முன் தடுமாறுவது,
உன்னால் இயன்றவரை முயற்சி செய்து,
வலிமை இழப்பது,
எனக்கு நன்றாகப் புரிகிறது.
ஆனால் நீ கட்டாயம்,
மீண்டும் முயற்சிக்க வேண்டும்,
மீண்டும் நடக்க வேண்டும்,
மீண்டும் பறக்க வேண்டும்.
நான் அங்கிருப்பேன்,
நீ விழுவதைத் தடுக்க.
எனக்கு நன்றாகப் புரிகிறது, உனது நிலை!
அந்த உலகைத் தனியச் சந்திப்பது,
பிழையென்று உணர்ந்து நீ தவிப்பது.
நானே இவ் உலகைப் படைத்தேன்!
நானே அதைக் காக்கின்றேன்!
நானே அதை அழிப்பேன்!
தயங்காதே!
என்னில் நம்பிக்கை வை!
உனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்,
உன்னை வழி நடத்த,
என்பதை மறந்து விடாதே!
{kunena_discuss:779}