(Reading time: 1 - 2 minutes)

நான் கடவுளைக் கேட்டேன் - வின்னி

Sivalingam

நான் கடவுளைக் கேட்டேன் நல்ல வலிமையைத்  தா என்று

அவன் இயலாமையைத் தந்தான்,

நான் பணிவாக இருப்பதற்கு.   

 

நான் நல்லஆரோக்கியத்தைக் கேட்டேன்

அவன் எனக்கு உடல் ஊனத்தைத் தந்தான்,

நான் நல்லது செய்யப் பழகிக் கொள்ள….  

 

நான் மகிழ்ச்சியாக  வாழச் செல்வம் கேட்டேன்

அவன் வறுமையைத் தந்தான்,

நான் புத்திசாலியாக இருக்க…

 

நான் புகழ் தேட அதிகாரத்தைக் கேட்டேன்,

அவன் பலவீனத்தைத் தந்தான்,

நான் கடவுளை நாட …

 

நான் சந்தோசமான வாழ்க்கையைக் கேட்டேன்

அவன் எனக்கு உயிரைத் தந்தான்

நான் எல்லாவற்றையும் அனுபவிக்க…

 

நான் கேட்டதை தவிர, 

அவன் எல்லாம் தந்தான். ஆனால்,

 நான் விரும்பியவற்றைத் தரவில்லை  ….

 

நான், எல்லா விதத்திலும் ,

அவன் ஆசீர்வாதம் பெற்ற பக்தன்

நான்,பெரிய பாக்கியசாலி.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.