நீதான் கோவில் - வின்னி
உனக்கு உகந்த ஆலயத்தை
உன் விருப்பத்துக்கு எற்ற வகையில் அடைய முடியாது.
நீதான் கோவில்
அதை மனதில் வைத்திரு, மறந்து விடாதே!
அது ஒரு மிகப் பெரிய கோபுரமல்ல
கடவுள் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்
அவருடன் பேசு
சமயத்தை நம்புகிறோம் என்று சொல்பவர்கள்
உன்னைக் கைவிட்டு விடுவார்கள்
அது வாழ்கையின் உண்மை
கடவுள் உன்னைக் கைவிடமாட்டார்
கடவுளே கைவிட்டது போலத் தோன்றும்
ஆனால் அது நன்மையாகவே மாறிவிடும்.
கடவுள் உன்னைச் சோதிக்கிறார் என்று நினைத்துக்கொள்
கண்களை மூடிக், கை கட்டி வழிபடுவது மட்டும்தான் பிரார்த்தனை அல்ல
கடவுளை நம்பி நீ நினைக்கும் எண்ணங்கள்தான் பிரார்த்தனை
கடவுளைப் பிரார்த்தி
அவருடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்
அடிக்கடி வழிபடு.
அதை ஒரு வழக்கமாக்கிக்கொள்!
ஒழுங்கு செய்யப்பட்ட சமயம் ஒரு குழப்பமானது
ஆனால் அது உனது ஆன்மீகத் தேவைகளைக் குறைத்து விடாது
கடவுளை நம்பு
மூட நம்பிக்கைகளை அகற்றிவிடு
நீதான் கோவில், மறந்து விடாதே
{kunena_discuss:779}
கடலில் இருப்பது உப்பு
நம் மனதில் இருப்பது நட்பு