(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நீ ஒருபோதும் தனியே நடக்கப் போவதில்லை - வின்னி

Not alone

அந்தப் புயலில் நீ நடக்கும்  போது

தலையை மேலே  நிமிர்த்தி நட

இருட்டைக் கண்டு பயந்து விடாதே

அந்த புயற் காற்றில் தயங்காமல் தொடர்ந்து நட

அந்த  கன மழையில் கலங்காமல் தொடர்ந்து நட

உன் கனவுகளில் கலந்தபடி தொடர்ந்து நட

உன் இதயத்தில் நம்பிக்கையைத் இறுகத் தழுவியபடி நட

அந்த புயலின்  இறுதியில் நீ காணப்போவது  

பொன்நிறமான அழகிய மேகம்

பறவைகளின் இனிய கீதம்

தொடர்ந்து நட….. தொடர்ந்து நட…..

நம்பிக்கையுடன் தொடர்ந்து நட…….

வாழ்க்கை என்னும் அந்தப் புயலில்

நீ இனிஒருபோதும் தனியே நடக்கப் போவதில்லை

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.