கவிதை - நீ ஒருபோதும் தனியே நடக்கப் போவதில்லை - வின்னி
அந்தப் புயலில் நீ நடக்கும் போது
தலையை மேலே நிமிர்த்தி நட
இருட்டைக் கண்டு பயந்து விடாதே
அந்த புயற் காற்றில் தயங்காமல் தொடர்ந்து நட
அந்த கன மழையில் கலங்காமல் தொடர்ந்து நட
உன் கனவுகளில் கலந்தபடி தொடர்ந்து நட
உன் இதயத்தில் நம்பிக்கையைத் இறுகத் தழுவியபடி நட
அந்த புயலின் இறுதியில் நீ காணப்போவது
பொன்நிறமான அழகிய மேகம்
பறவைகளின் இனிய கீதம்
தொடர்ந்து நட….. தொடர்ந்து நட…..
நம்பிக்கையுடன் தொடர்ந்து நட…….
வாழ்க்கை என்னும் அந்தப் புயலில்
நீ இனிஒருபோதும் தனியே நடக்கப் போவதில்லை
{kunena_discuss:779}