வேண்டுதல் - அஹல்யா
நெடுநாட்களாக திட்டமிட்டு...
"அவர் அழைத்தால்தான் போக முடியும்" எனும்
உறவுகளிடம் உதிர்ந்த வார்த்தைகளினூடே ...
வெகுதூரம் பயணம் செய்து ...
இறுதியில் கைகூப்பி நின்று
இஷ்ட தெய்வத்தின் முன் கண்மூடினேன்
வந்ததே திருமுகத்தை காண என்பதை மறந்து
மேலும் வியந்தேன்......
யாரோ ஒருவரின் மன்றாடுதல்
என் காதுகளில் இனிமையாவது எப்படி ....?
கோவில் மணி .........
{kunena_discuss:779}