(Reading time: 1 - 2 minutes)

காத்திருக்கிறேன் காதலே - ஸ்ரீதேவி

Love

நீ அறிவாயோ  காதலே ?

முன்பெல்லாம் உன் அருகாமை மகிழ்ச்சியை தந்தது.

சில காலம் கழித்து, உன் நினைவுகள் உற்சாகத்தை தந்தன.

பிறகு உன் கனவுகள் களிப்பை தந்தன .

இப்போதெல்லாம் நீ வாழும் உலகில் நானும் இருக்கிறேன்,

என்பதே நிறைவை தருகிறது

அடுத்த நிலை யாதென நானறியேன்

நீ என்னை விரும்பவில்லை ,

ஆனால் எனக்கு உன்னை காதலிக்கிறேன்

 என்பதே கர்வமாய்  ஆகிறது .

இறந்த பின் உன்னை காண இயலுமோ ?

சில நேரம் மனம் பிதற்றுகிறது .

ஆனால் நான் படித்தவள் ஆயிற்றே !

கற்றதை போல, ஆத்மாவிற்கு இடம் இல்லை இவ்வுலகில்

எனில் என் செய்வேன் !

ஏதுமற்ற வெறுமையை விட

உனக்காக ஏங்கி நிற்கும் வாழ்வும்,

சுகமே எனக்கு!

காத்திருக்கிறேன் காதலா

கனவில் மட்டுமே நிகழும் என தெரிந்தும் ,

உன் கரம் சேரும் நாளுக்காக !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.