காத்திருக்கிறேன் காதலே - ஸ்ரீதேவி
நீ அறிவாயோ காதலே ?
முன்பெல்லாம் உன் அருகாமை மகிழ்ச்சியை தந்தது.
சில காலம் கழித்து, உன் நினைவுகள் உற்சாகத்தை தந்தன.
பிறகு உன் கனவுகள் களிப்பை தந்தன .
இப்போதெல்லாம் நீ வாழும் உலகில் நானும் இருக்கிறேன்,
என்பதே நிறைவை தருகிறது
அடுத்த நிலை யாதென நானறியேன்
நீ என்னை விரும்பவில்லை ,
ஆனால் எனக்கு உன்னை காதலிக்கிறேன்
என்பதே கர்வமாய் ஆகிறது .
இறந்த பின் உன்னை காண இயலுமோ ?
சில நேரம் மனம் பிதற்றுகிறது .
ஆனால் நான் படித்தவள் ஆயிற்றே !
கற்றதை போல, ஆத்மாவிற்கு இடம் இல்லை இவ்வுலகில்
எனில் என் செய்வேன் !
ஏதுமற்ற வெறுமையை விட
உனக்காக ஏங்கி நிற்கும் வாழ்வும்,
சுகமே எனக்கு!
காத்திருக்கிறேன் காதலா
கனவில் மட்டுமே நிகழும் என தெரிந்தும் ,
உன் கரம் சேரும் நாளுக்காக !
{kunena_discuss:779}