கவிதை - அந்த நாள் - ஸ்ரீதேவி
அந்த நாள் வரும் ….
எனை காண அவன் கண்கள்
காத்திருக்கும் நாள்
என்னிடம் பேச அவன் வார்த்தைகள்
தடுமாறும் நாள்
என் முகம் காண அவன் தயக்கம்
கொள்ளும் நாள்
என்னை அள்ளி அனைத்துக் கொள்ள
அவன் கரங்கள் நீளும் நாள்
எனை விட்டு பிரியாதிருக்க அவன்
மனம் துடிக்கும் நாள்
என் மீதான அவன் காதலை அவன்
கண்கள் காட்டிக்கொடுக்கும் நாள்
எத்தனை நேரம் என்னை பார்த்தாலும்
போதவில்லை என அவன் மனம் பரிதவிக்கும் நாள்
நான் கொடுத்த காதலை துளி
குறையாமல் அவன் கொடுக்க முயலும் நாள்
நீயின்றி நானில்லை என அவன்
கவிதை பேசும் நாள்
நிச்சயம் வரும்....
அந்த நாளை காணாமல் ,
சென்று விடாதே என்று
உருகி கரையும் உயிரை ,
ஊமையென உறைய வைத்திருக்கிறேன்
உடலுக்குள் ....
{kunena_discuss:779}