கவிதை - எனக்கே எனக்காக - நிஷா லக்ஷ்மி
காத்திருக்க வேண்டுமாம்..
உனதன்பினை பெறுவதற்காக!!
நீ சொல்லும் போதே..
சிரிப்பை அடக்கிக்கொண்டேன்..
உள்ளூர வலிக்கவும் செய்தது..
என்னிடத்தில்...
வேறொருவளை வைத்திருந்தாயோ!
கடவுளின் கருணை..
உன் பக்கமென்றால்..
நீயும் நானும்..
பந்தத்தில் இணையாமல் இருப்போம்..
கடவுளின் கருணை..
என் பக்கமென்றால்..
உனது இருவிழிப் பார்வைகள்..
எனக்கே எனக்காய் மாறட்டும்..!!
{kunena_discuss:779}