கவிதை - வலிகள் மட்டும் என்னோடு - நிஷா லக்ஷ்மி
விட்டுவிட வேண்டுமாம்
உன்னை..
சரியென்று சொல்லிவிட்டேன்..
இரவுகளின் கண்ணீருக்கு..
அணைபோட துணிந்தும்விட்டேன்..
எல்லாம் இருந்தும்..
எதுவுமில்லாததைப் போல் உணர்ந்தும்,
அனைத்தும் எனக்கு
மகிழ்ச்சி தான் என்று
என் நடிப்பை அரங்கேற்ற
பயிற்சி எடுக்க துவங்கிவிட்டேன்..
பகலில் நடிப்பும்..
இரவில் கலக்கமுமாய்..
விடிகிறது என் பொழுதுகள்..
என் மகிழ்ச்சியும்..
துக்கமும் நீயாகிவிட்டாய்..
யாரிடமும் சொல்லவுமில்லை..
உன்னிடம் கூட சொல்லத்தான் இல்லை..
பிரியாதே என்றாய்..
பிரிந்துவிடலாம் என்றேன்
புன்னகைத்துக்கொண்டே..!
வலியுடன் சென்றது நீ மட்டுமல்ல..
நானும் தான் என்பதை..
யாராவது அறிவாரா..!!
என்னைத்தவிர..!!
{kunena_discuss:779}