மழை - சரளாதேவி
புலர்ந்த காலை..இருள் சூழ்ந்தது வானம்
கருமேக கூந்தலில்..
ஆராரோ பாடியது
அடைமழை..
கதிரவனின் தூரிகைப்பட்டு
ஏழுவர்ண கீரல்கள்..வானெங்கும் மழைதூறல்கள்
காற்றின் விஸ்வரூபத்தில்
கதகளி ஆடியது தென்னங்கிளைகள்
தாகம் தீர்ந்த மலர்கள்
மகிழ்ந்து ஆடிட
ஈரச்சேலை கட்டிய மரங்கள்
குளிர்ந்து நடுங்கிட
பரவசத்தில் குளித்த பறவைகள்
டூயட் பாடிட..
தொடக்கமும் முடிவும் இல்லா
புள்ளி கோலங்கள்- என் ஜன்னலெங்கும்..
அதை எண்ணிக்கொண்டே
தொலைவில் எதையோ தேடி அலைந்தது
என் கருவிழிகள்..
உன்னை மீண்டும் காண
எழ மனமில்லாமல்
என் படுக்கையோடு பசையொட்டிக்கொண்டேன்
இனி கனவில் நான்..
{kunena_discuss:779}