கவிதை - நன்றி மடல் - அம்மு ஜெயலஷ்மி
காதலிப்பது எப்படி என்று எனக்கு கற்றுக்கொடுத்தாய்..!
இரு இதயங்களின் அன்பின் பரிமாற்றம் எப்படி இருக்கும் என்று எனக்கு புரியவைதாய்...!
ஆறுதல், ஆசைகளுக்காக எப்படி ஏங்குவது என்பதை ஏங்க வைத்து அனுபவம் கொடுத்தாய்..!
என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் எப்படி காயப்படுத்துவது என்பதை என்னை காயப்படுத்தி சொல்லி தந்தாய்..!
காதலில் வரும் வலிகள் எப்படி இருக்கும் என்று எனக்கு அந்த வலிகளை தெரியப்படுத்தினாய்..!
அன்பனவர்கள் நம்மிடம் இல்லாமல் போனால் தவிப்பது எப்படி என்று என்னை தவிக்க விட்டு போதித்தாய்..!
உன்னை திரும்பப்பெற எப்படி கெஞ்சுவது என்று என்னை கெஞ்சவும் வைத்து சொல்லி கொடுத்தாய்..!
இன்று உன் நினைவுகளை நினைத்து அழுவது எப்படி, சிரிப்பது எப்படி, உன்னை மறப்பது எப்படி என்றும் எனக்கு அறியவைத்தாய்..!
இவை அனைத்தும் சொல்லிக்கொடுத்த உனக்கு என் நன்றிகள்...
நேசம் என்பது வரமல்ல, சாபம் !
என்று கற்று தந்தமைக்கு நன்றி
{kunena_discuss:779}