கவிதை - பெயர் அறியா உறவிது - அம்மு ஜெயலஷ்மி
உன்னை நேரில் கண்டதில்லை
ஆனாலும் இடப்பக்க இருதயத்தின் அடியில்
அழுத்தமாய் பதிந்திருக்கிறது உந்தன் முகம்!!
உன் விழியோடு விழி கலந்ததில்லை
ஆனாலும் நினைக்கும் மறுநொடியே
கலந்ததது போல உணர்ந்து உறைகிறேன்..!!!
பூவின் மென்மையாய் நான் இருக்க..
என்னை சுழற்றி செல்லும்
புயலின் தன்மையாய் நீ இருக்கிறாய்..!!
வெளிப்படையாய் நான் அன்பு காட்டிட
மறைமுகமாய் நீ அன்பு காட்டிட
அருகருகே நாம் இல்லை என்றாலும்
ஏதோ இடைவிடாத பந்தம்
நமக்குள் தொடர்வதை போல
மனதிற்குள் எப்போதும் ஒரு எண்ணம்!!
உன் ஆண்மையின் அழகை
வர்ணித்து குமரிகள் கொஞ்சிட..
அடக்க முடியாதோர் காதலுடன்
உன்னை எனக்கு மட்டுமாய்
கொண்டாடிட எண்ணி தவித்து
அதற்காக நான் எடுத்த முயற்சிகள் தோற்க..
வாடியது என்னுடன் என் மனமும்..
நீ என் காதலனா?? இல்லை...
நானா உன் காதலி?? இல்லை..
காதலுக்கும் நட்புக்கும் இடையே
நூலிழையில் ஒரு சொந்தம்
நுட்பமானதொரு உணர்வு..!!
முன்னுரிமை அளித்து
முகம் மலர செய்யும்
பெயர் அறியாத உறவு அது..!!!
{kunena_discuss:779}