(Reading time: 1 - 2 minutes)

எல்லாம் நீயே!!! - ஆர்த்தி R

Krishnar

கோசலையின் மைந்தனும் நீயே

கைகேயியின் புதல்வனும் நீயே

இலக்குவனின் தமையனும் நீயே

பரத,சத்ருக்கனனின் அண்ணனும் நீயே

கொடும் அரக்கியான தாடகையை கொன்றவனும் நீயே

முனிவர் நடத்தும் யாகம் காத்தவனும் நீயே

வீறு கொண்டு பகைவனை அழித்தவனும் நீயே

கால் வைத்து கல்லாகிய அகலிகையை மீட்டவனும் நீயே

வில் உடைத்து சுயம்வரம் வென்றவனும் நீயே

கோபம் கொண்ட பரசுராமானின் மனதை வென்றவனும் நீயே

ஜனகரின் புதல்வியாம் வைதேகியை மணந்தவனும் நீயே

கைகேயியின் சூழ்ச்சியால் கானகம் புகுந்தவனும் நீயே

குகனை சகோதரனாய் ஏற்றவனும் நீயே

தசரதன் மரணம் கேட்டு துடித்தவனும் நீயே

ஜடாயுவின் நட்பை பெற்றவனும் நீயே

சூர்ப்பனகையால் சீதையை தொலைத்தவனும் நீயே

சபரிக்கு முக்தி அளித்தவனும் நீயே

கிஷ்கிந்தையில் அனுமன் சுக்கிரிவன் நட்பை பெற்றவனும் நீயே

வாலியை வதம் புரிந்தவனும் நீயே

சீதையின் சூடாமணியை அனுமனிடம் கண்டவனும் நீயே

இலங்கைக்கு பாலம் அமைத்தவனும் நீயே

விபிஷணணுக்கு அடைக்கலம் தந்தவனும் நீயே

பத்து தலை இராவணனைப் பந்தாடியவனும் நீயே

கொடிய அரக்கனை விழ்த்தியவனும் நீயே

சீதையை மீட்டவனும் நீயே – என்

மனதை ஆட்கொண்ட எம்பெருமானும் நீயே நீயே!!!!!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.