கவிதை - ஏனோ?? - ஆர்த்தி N
மனதில் புயல் வீச
உன் ஒற்றைப் பார்வையில்
அமைதிக்கொள்ளும் மனம்
உன் அந்நியப் பார்வையில்
வெற்றிடமாய் உணர்வது
ஏனோ??
நான் நீ நாம் என்பது
சாத்தியமில்லை என உணர்ந்தும்
உன் கவலையில்லா புன்னகையில்
சந்தோஷித்தாலும் ஆழ் மனம்
வெற்றிடமாய் உணர்வது
ஏனோ??
நட்பின் பிளவு மனதை இவ்வளவு
வெற்றிடமாய் உணரச்செய்வது தான்
ஏனோ??
{kunena_discuss:779}